Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, May 18, 2011

இந்திய பணியாளர்களால், பிரிட்டன் குடியேற்ற துறை கவலை?

லண்டன் : கம்பெனிகள் மூலம் வருகை தரும் இந்திய தொழில் நுட்ப பணியாளர்கள் குறித்து, பிரிட்டன் பொதுக்கணக்கு குழு கவலை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் உள்ள நிறுவனங்கள், அதிகளவில், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரவழைத்து தங்கள் வேலைகளை முடித்து கொள்கின்றன. டாடா கன்சல்டன்சி நிறுவனம், விப்ரோ, எச்.சி.எல்., மகேந்திரா, காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் அதிக அளவில் பிரிட்டனில் பணிபுரிகின்றனர்.

வேலைக்கு வரும் பணியாளர்கள் பலர், விசா காலம் முடிந்தும், பிரிட்டனில் தங்கி விடுகின்றனர். குடியேற்றத்துறை இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை' என, பொதுக்கணக்கு குழு தெரிவித்துள்ளது.பிரிட்டனில், விசா காலம் முடிந்து, ஒரு லட்சத்து, 81 ஆயிரம் பேர் தங்கியுள்ளதாகவும், இவர்களது வருகையை குறைக்கும் நடவடிக்கையில் பிரிட்டன் குடியேற்றத்துறை தவறி விட்டதாகவும், பொதுக்கணக்கு குழு தலைவர் மார்க்கரெட் ஹோட்ஜ் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!