Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 13, 2011

பாலியல் விவகாரத்துக்கு பரிகாரம் சொல்கிறார், சங்கராச்சாரி!!

சேலத்தில் உள்ள சங்கரமடத்திற்கு பக்தர்களுக்கு ஆசி(?) வழங்கவந்த சங்கரராமன் கொலை புகழ் சங்கராச்சாரி, பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது என நிருபர்களிடம் பேட்டியளித்துள்ளார். சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியதால் வண்டவாளங்கள் எல்லாம் வெளியாகி சீரழிந்தவர் தாம் சங்கராச்சாரி.

ஆன்மீகப்போர்வையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு சேவை செய்வது வரும் சங்கராச்சாரி பாலியல் தொடர்பான அசிங்கங்களிலும் பெரும் கில்லாடியாவார். பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முன்பே சமாதானப் பேச்சு என்ற பெயரில் நாடகமாடி தலையிட்டுவருகிறார். சில புறம் போக்குகளை கையில் பிடித்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஏஜண்டாக மாறி முஸ்லிம்கள் பாப்ரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்க தயாராகி விட்டதாக கதையளந்துள்ளார்.

சங்கராச்சாரியின் பார்வையில் சுமூக தீர்வு என்பதே பாப்ரி மஸ்ஜிதை முஸ்லிம்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு தாரை வார்க்க வேண்டுமென்பதே!உ.பி.மாநில சுன்னி வக்ஃப்போர்டு உச்ச நீதிமன்றத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு விசாரணைக்கு எடுத்து முந்தைய அலகாபாத் உயர் நீதிமன்ற கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புக் குறித்து விசித்திரமான விந்தையான தீர்ப்பு என கருத்து தெரிவித்துள்ள நிலையில் சுன்னி வக்ஃபோர்டு சமாதானத்திற்கு தயாரானதாக பொய்களை புழுகியுள்ளார் சங்கராச்சாரி.

பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிகள் உறுப்பினர்களாக செயல்படும் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவது என முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் சங்கராச்சாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த முஸ்லிம்கள் முன்வந்தார்கள் என தெரியவில்லை. பொதுவாக சமயம் தொடர்பான பிரச்னைகளுக்கு நீதி மன்றத்தை அணுகாமல் பேசித் தீர்ப்பதே நல்லது என சங்கராச்சாரி கூறுவதற்கு காரணம், சங்கரராமன் கொலைவழக்கு ஆன்மீகம் தொடர்பானது எனவே அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என மறைமுகமாக கூற வருகிறாரோ என்னவோ? சமாதானம் என்ற பெயரில் பாப்ரி மஸ்ஜித் நிலத்தை களவாட திட்டமிடும் சங்கராச்சாரி போன்ற ஒழுக்கங்கெட்ட ஆன்மீக கயவர்களிடம் முஸ்லிம்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!