Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, May 4, 2011

தேர்தல் விதி மீறல், நடிகை குஷ்புக்கு சம்மன்!

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 60 வழக்குகள், வாக்காளர்களை இடையூறு செய்ததாக 19 வழக்குகள், தேர்தல் விதிகளை மீறியதாக 260 வழக்குகளை, தேனி மாவட்ட போலீசார் பதிவு செய்தனர்.

இதில், 10 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. 210 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 40 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளன. தேர்தல் வழக்குகள் அனைத்தும் போலீஸ் ஸ்டேஷன் ஜாமீனில் வெளிவரக் கூடியவை என்பதால், வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து வேட்பாளர்களையும் கைது செய்து, ஜாமீனில் விட்டுள்ளனர்.

ஆனால், பிரசாரத்திற்கு வந்த நடிகை குஷ்பு மீது பழனிசெட்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி போலீசில் விதிகளை மீறியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஷ்பு வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால், சம்மன் அனுப்பி கைது செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவருக்கு ஸ்டேஷனில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!