Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 28, 2011

சமச்சீர் கல்விக்கு முழு ஒத்துழைப்பு, ஆசிரியர் கழகம் முடிவு

சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என்று மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் முடிவு செய்துள்ளது.

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன்,

சமச்சீர் கல்வி தொடர்பாக அமைக்கப்படும் குழுவில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக பிரதிநிதிகளுக்கு இடமளிக்க வேண்டும். மாணவர் நலனில் தலைமை ஆசிரியர்கள் அக்கறை கொண்டுள்ளனர். ஆங்கில வழிக் கல்வியில் வகுப்பு ஒன்றுக்கு 40 மாணவர்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க வேண்டும். பள்ளிகளின் சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!