Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 3, 2011

தங்கையை காப்பாற்ற தமையன் டெல்லி பயணம்?

மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு பிறகு சென்னையில் முகாமிட்டிருந்தார். திமுக உயர்மட்டக்குழுவில் பங்கேற்ற அவர் சென்னையில் இருந்து கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன் தினம் அவர் கொடைக்கானலுக்கு ஓய்வுக்கு சென்றிருந்தார். இதை அறிந்த தென்மாவட்ட கட்சியினர் அழகிரியை கொடைக்கானலில் சந்தித்து ஆலோசனை செய்தனர்.

இன்று அதிகாலையில் கொடைக்கானலில் இருந்து மதுரை சென்ற அழகிரி, காலை 10 மணிக்கு அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுச்சென்றார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வரும் 6ம் தேதி சிபிஐ விசாரணைக்கு கனிமொழி ஆஜராகவேண்டும்.

இந்நிலையில் அழகிரியின் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழியை கைது செய்யாமலிருக்க முன் நடவடிக்கைகள் எடுப்பதற்காகத்தான் அழகிரி திடீரென்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!