Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 27, 2011

ஆளும் கட்சிக்கு அறிவுரை சொன்ன, ஸ்டாலின்

எதிர்க்கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நம்பிக்கையை பெரும் வகையில், ஆளும் கட்சியினர் நடந்துகொள்ள வேண்டும் என்று திமுக சட்டமன்ற தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜெயக்குமாரும், துணை சபாநாயகராக தனபாலும் 27.05.2011 அன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக சட்டமன்ற தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்திப் பேசுகையில், சபாநாயகர் ஜெயக்குமார் அனைத்து உறுப்பினர்களின் மனநிலையை அறிந்த சிறந்த அனுபவம் பெற்றவர். ஒரு தேருக்கு அச்சாணி போன்று எதிர்க்கட்சி விளங்குகிறது. சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். 5 விரல்களும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அவை இணைந்து ஒன்றுகூடினால்தான் ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும். ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!