Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, May 9, 2011

மார்க்கை வைத்து காசு பார்க்கபோகும் தனியார் பள்ளிகள்!!

நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவிலான, முதல் மூன்று இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிடித்து சாதனை படைத்துள்ளன. அரசு பள்ளியோ, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் கூட, மாநில அளவிலான இடத்தை பிடிக்கவில்லை. இதன்மூலம், "தரமான கல்வியை வழங்குவது தனியார் பள்ளிகளே என்ற வாதம்' எடுபட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 50 ஆயிரம் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, ஒரு கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், 75 லட்சம் பேர், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். 25 லட்சம் பேர், தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.பெரும்பான்மை மாணவர்கள், அரசு பாடத்திட்டத்தின் கீழ், கல்வி பயின்றாலும், கல்வித் தரத்தில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகள், குறிப்பாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. இதனால், பொதுத்தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளிலும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே அதிகளவில் இடம் கிடைக்கின்றன. இவற்றின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் மட்டுமே தரமான கல்வியை வழங்கி வருகின்றன என்றும், தனியார் பள்ளிகளின் பாடத்திட்டம் தான் தரமான பாடத்திட்டம் என்றும், தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

இவர்களின் வாதத்திற்கு தகுந்தாற்போல், ஒவ்வொரு ஆண்டு பொதுத் தேர்விலும், தனியார் பள்ளி மாணவர்கள் சாதித்து வருகின்றனர். நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவிலான மூன்று இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே தட்டிச் சென்றுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மாநில அளவில் முதல் இடத்தையும், மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மீதமுள்ள நான்கு இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளே பிடித்துள்ளன. பெரும்பான்மை மாணவர்கள் பயிலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, ஒரு மாணவர் கூட, மாநில அளவில் மதிப்பெண் பெறவில்லை.

இதை காரணம் காட்டி காசு பார்த்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!