Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 6, 2011

சென்னையில் சாதனை! 5, ந்து ஆண்டுகளில்

நோக்கியா இந்தியா நிறுவனம், ஐந்து ஆண்டுகளில் 50 கோடி மொபைல் போன் சாதனங்களை தயாரித்து, சாதனை படைத்துள்ளது.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில், நோக்கியா இந்தியா நிறுவனத்தின் மொபைல் போன் தொழிற்சாலை அமைந்துள்ளது. இத்தொழிற்சாலையில், கடந்த 2006ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல் மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2007ம் ஆண்டில், 10 கோடியாக இருந்த மொபைல் போன் சாதனங்கள் தயாரிப்பு, படிப்படியாக அதிகரித்து, தற்போது 50 கோடியை எட்டியுள்ளது. ஐந்து ஆண்டுகளில், படைக்கப்பட்ட இந்த சாதனையை கொண்டாடும் விதமாக, சி 3 என்ற அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கியா இந்தியா நிறுவனத்தின் செயல் பிரிவு இயக்குனர் பிரகாஷ் கடாமா, புதிய மொபைல் போனை வெளியிட்டு கூறியதாவது: சென்னைத் தொழிற்சாலையில் இதுவரை, 28.50 கோடி டாலர் (1,311 கோடி ரூபாய்) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, 1,000 முதல் 6,000 ரூபாய்வரை விலை கொண்ட மொபைல் போன்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதையொட்டி 6,074 ரூபாய்விலையில், அதி நவீன வசதிகள் கொண்ட புதிய சி 3 மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் விரைவில் இரண்டு 'சிம்' பொருத்தக் கூடிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இவ்வாறு பிரகாஷ் கடாமா கூறினார்.

1 comments :

நோக்கியா இந்தியா நிறுவனம், ஐந்து ஆண்டுகளில் 50 கோடி மொபைல் போன் சாதனங்களை தயாரித்து, சாதனை படைத்துள்ளது.//
பாராட்டுக்கள். வழ்த்துக்கள்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!