Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, August 16, 2014

ஆரிய அயோக்கியதனத்திற்கு அளவில்லியா?

ஆரிய அயோக்கியதனத்திற்கு அளவில்லியா வரலாறையே திரித்தும் மறைத்தும் எழுதும் பார்பன பயங்கரவாதிகள் என்பது மிகையில்லை. திரிக்கபட்ட விஷ வித்துக்கள் விதைத்து பரப்பிய வரலாறை தோலுரித்த கதை. 

"திப்பு சுல்தான் 3000 பிராமணர்களை இசுலாத்தில் இணைய பலாத்காரம் செய்தபோது அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்." என்ற வரிகளை அன்று ராஜஸ்தான் மத்திய பிரதேசம் உத்திரபிரதேசம்  ஒரிசா பீஹார்,மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் உயர்நிலை கல்வி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு நூலை படித்து அதிர்ந்தார் பி.என் பாண்டே. 

ஒரிசா மாநிலத்தின் முன்னாள் கவர்னரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ,வரலாற்று ஆய்வாளருமான பி.என் பாண்டே அவர்கள் 1928 இல் அலகாபாத்தில் மாவீரன் மைசூர் வேங்கை திப்பு சுல்தான் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஆங்கிலோ -பெங்காலி கல்லூரியின் மாணவர் மன்றத்தின் வரலாற்று கழகத்தை தொடக்கி வைக்க அழைக்கபட்டிருந்தார் .அந்நிகழ்வில் உரையாற்ற ஆயத்தம் செய்தபோதுதான் மேற்கண்ட வரிகளை ,வரலாற்று புரட்டை கண்டு அதிர்ந்திருக்கிறார்.

கல்கத்தா பல்கலைகழகத்தின் சம்ஸ்கிருததுறை தலைவர் டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரி பிராமணர் எழுதிய நூல் அது என்பதை அறிந்த பாண்டே எந்த ஆதாரத்தை கொண்டு இந்த தகவலை எழுதுனீர்கள் என விளக்கம் கேட்டு சாஸ்திரிக்கு கடிதம் எழுதுகிறார். பல கடிதங்களுக்கு பிறகு டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரியின் பதில் கடிதத்தில் "மைசூர் கெசட்டில் இருந்து இதற்கான ஆதாரம் எடுக்கப்பட்டது " என தெரிவிக்கிறார். உடனே மைசூர் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் சர்.பிஜெந்திர நாத்சீல் அவர்களுக்கு " டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரி அவர்கள் மைசூர் கெசட்டில் எடுத்ததாக கூறப்படும் செய்தி உண்மைதானா என உறுதிபடுத்த கோரி கடிதம் அனுப்புகிறார்.

துணைவேந்தர் அக்கடிதத்தை மைசூர் கெசட்டின் புதுபற்ற்ஹிப்பினை தயார் செய்து கொண்டிருந்த பேராசிரியர் .ஸ்ரீஹன்டையா அவர்களுக்கு அனுப்பி பதில் தர கோருகிறார்.அவர் மைசூர் கெசட்டினை ஆராய்ந்து இதுமாதிரியான சம்பவம் எதுவும் மைசூர் கெசட்டில் இடம்பெறவில்லை என பதிலளிக்கிறார்.அதுமட்டுமின்றி திப்புசுல்தானின் பிரதம மந்திரி புரணாயா என்பவர் பிராமணர் என்பதையும் ,சேனைதலைவர் கிருஷ்ணராவ் என்பதையும் தெரிவித்ததோடு ,திப்பு சுல்தான் 156 இந்து கோவில்களுக்கு வருடாந்திர செலவுகளுக்கு மான்யம் வழங்கிய பட்டியலையும் ,சிருங்கேரி மடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரிக்கும் திப்புவுக்கும் இருந்த நேச உறவினை வெளிபடுத்தும் ஆதாரங்களாக சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய 30 கடிந்தங்களின் புகைப்பட நகல்களை பி.என். பாண்டே அவர்களுக்கு அனுப்புகிறார்.

பேராசிரியர் ஸ்ரீஹண்டையாவிடமிருந்து பெற்ற ஆதாரங்களை கொண்டு அன்று பாடதிட்டதிற்க்கான நூல்களை தேர்வு செய்யும் கல்கத்தா பல்கலைகழகத்தின்துணைவேந்தருக்கு " பொய்யும் புனைந்துரையுமாக அமைந்துள்ள டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரியின் நூலை பாடதிட்டதிலிருந்து நீக்கவேண்டும். அந்நூலை தடை செய்யவேண்டும் என எழுதுகிறார்.

அப்பல்கலைகழகத்தின் துணைவேந்தர் அஷ்டோஸ் முகர்ஜி உடனே நடவடிக்கை எடுத்து விஷம் விதத்தை அந்நூலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி தடை செய்தார்.

இப்போது சொல்லுங்கள் மனிதநேயமும் மத நல்லிணக்கமும் பேணிய மைசூர் வேங்கை திப்புவின் வரலாற்றை திரித்த காவிகயவர்கள் செய்தது நியாயமா... துரோகமா ? தர்மமா ..அநீதியா ?.

- B.N.Pande, 'Distortion of Medival Indian History' , Islam and Indian Culture page no 37 -39.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி தெரியும்
கப்பல் வாங்க உதவியர் ஒரு முஸ்லீம் என்பது தெரியுமா?

சுபாஸ் சந்திரபோஸின் INA தெரியும்,
INA கட்டமைக்க தன் சொத்தையே எழுதியவர் முஸ்லீம் என்பது தெரியுமா?
INA முக்கிய தளபதிகளில் முஸ்லீமும் இருந்தது தெரியுமா?
வேலூர் சிப்பாய் கலகம் தெரியும்
சிப்பாய் கலகத்தின் முன்னோடிகளும், வழி நடத்தியவர்களிலும் முஸ்லீம்களே முதன்மையாய் இருந்தது தெரியுமா?
ஆங்கிலேயனை எதிர்த்து தோல்வியுற்று
காட்டிலே அலைந்து இறந்த முஸ்லீம் ராணியை பற்றி தெரியுமா?
காந்திக்கு பக்கபலமாய் இருந்த ஆலோசகர்களில் முஸ்லீம்களும் இருந்தது பற்றி தெரியுமா?
தேசியக்கொடியை வடிவமைத்தது முஸ்லீம் என்பது தெரியுமா?
வெள்ளையனின் ஆங்கிலமொழியை கற்பது ஹராம் என பத்வா வழங்கி மொழியைகூட வெறுத்து ஒதுக்கியது முஸ்லீம்கள் என்பது தெரியுமா?
தன் சதவிகிதத்தை விட அதிக எண்ணிக்கையில் வெள்ளைக்காரனை எதிர்த்த சமுதாயம்
வெள்ளைக்காரன் கொடுத்த பதவிகளை, பட்டங்களை தூக்கி எறிந்த சமுதாயமே இந்திய முஸ்லீம்கள் என்பதை நினைவில் கொள்வோம்.
இந்தியன் என்று சொல்லடா......
தலை நிமிர்ந்து நில்லடா

1 comments :

இந்துக்கள் எல்லாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் கன்னியாகுமரி தமிழ்நாட்டுக்குப் போகாமல் கேரளாவில் இருந்திருக்கும் " மாண்புமிகு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேரளாவில் பேச்சு.

#உண்ட வீட்டுக்கு ரெண்டகம் எமது வழக்கம்இவ

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!