Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 28, 2011

இலகுவான கார் இலங்கையில் அறிமுகம், வரும் ஜுனில்

புதுடில்லி : உலகின் மிககுறைந்த விலைக்காரான டாடா மோட்டார் நிறுவனத்தின் நானோ கார், வரும் ஜூன் மாதம் முதல் இலங்கை சாலைகளில் ஓட உள்ளது.

ஆரம்பித்த புதிதில், அனைவரும் விரும்பும் வாகனமாக இருந்த நானோ, அதில் உள்ள குறைபாடு, திடீரென்று தீப்பிடித்தது உள்ளிட்ட காரணங்களினால் அ‌தன் மீதான மதிப்பு மற்றும் விற்பனை ஆட்டம் காண துவங்கியது. மாதத்திற்கு 500 கார்கள் மட்டுமே விற்பனை என்ற இக்கட்டான நிலைக்கு நானோ கார் தள்ளப்பட்டது நினைவிருக்கலாம். இதன்பின், பல அதிரடி சலுகைகளை அறிவித்தது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். புதிதாக கார் வாங்குபவர்களுக்கு 4 ஆண்டுகால பராமரிப்பு கட்டணம் இலவசம் என்று முதலில் அறிவித்த டாடா நிறுவனம், பின், பழைய கார்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என அறிவித்தது.

இதன்பின்னர், நானோ காரின் விற்பனை கணிசமாக உயர துவங்கியது. உலகின் மிகக்குறைந்த விலை கார் என்று பெயர் எடுத்த நானோ கார், இந்தியாவில் மட்டும் ஓடுவது சரியில்லை என்றும், சர்வதேச நாடுகளிலும் நானோ கார் ஓடும் வகையிலான முடிவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுத்தது. இதன் ஒருபகுதியாக, நானோ காரை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டது. ‌அமெரிக்கா, ‌ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு நானோ காரை ஏற்றுமதி செய்த டாடா நிறுவனம், வரும் ஜூன் மாதம் முதல் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, 500 கார்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும், பின், கார்களின் எண்ணிக்கையை மாதத்திற்கு 200 என்ற அளவில் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!