Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 8, 2011

இலங்கை பயணம் என்கிற கண் துடைப்பு, நடவடிக்கை எப்போது?

கொழும்பு : இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து, ஐ.நா., நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதை அடுத்து, இது குறித்து விவாதிப்பதற்காக, இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக் குழு, விரைவில் இலங்கை செல்லவுள்ளது. இலங்கையில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

ஐ.நா., அளித்த அறிக்கையால் எழுந்துள்ள பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு, விரைவில் இலங்கை செல்லவுள்ளது. இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், ராணுவ செயலர் பிரதீப் குமார் ஆகியோர், இந்திய குழுவில் இடம் பெறக் கூடும்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் இலங்கையின் உயர் அதிகாரிகளை, இந்திய குழுவினர் சந்தித்து, இதுகுறித்து பேசவுள்ளனர்.சமீபத்தில், இலங்கையைச் சேர்ந்த உயரதிகாரிகள் சிலர், இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து, இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், இந்திய தரப்பில், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், இந்திய குழு இலங்கை வந்து சென்றபின், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், இந்தியா செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!