Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, April 7, 2011

நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது செய்த ஒரே தலைவர்?

அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக நடிகர் செந்தில் பிரசாரம் செய்து பேசியதாவது: எம்.ஜி.ஆர்., ஆட்சி செய்த போது நாட்டுக்கு நல்லது நடந்தது. அதேபோல் ஜெ., ஆட்சி செய்தபோதும் மக்களுக்கு நல்லது நடந்தது. கருணாநிதி மட்டும், நாட்டுக்கும் நல்லது செய்யமாட்டார். தன் வீட்டிற்கு மட்டும் தான் நல்லது செய்வார்.

முதியோர்களுக்கு பென்சன் கொடுக்கிறார். அவர் என்ன குபேரனா? அந்த பென்சனை வாங்கி கொண்டு அவர் வீட்டில் இருக்க வேண்டியது தானே? கச்சத்தீவை மீட்டு தாருங்கள் என்று சோனியாவிடம் கேட்டுள்ளாராம். அவர் தான் கச்சத்தீவையே அடகு வைத்தவர். நன்றாக நடிக்கிறார். சரியான அண்ட புளுகு, ஆகாச புளுகு. அவர்கள் நடத்தும் "டிவி'க்களை பார்த்து மக்கள் கெட்டு விட்டனர். விஜயகாந்த் மைக் எடுக்க குனிந்ததை, வேட்பாளரை அடித்ததாக காட்டுகின்றனர்.

வடிவேலு பிரசாரத்தின் போது ஒரு வயதானவரை தள்ளி விட்டதை நாங்களும் காட்டியுள்ளோம். எங்களிடமும் கேமரா இருக்கிறது. சுப்பிரமணியசாமி என்ற ஒரு குரங்கு உள்ளது. மாற்றி மாற்றி பேசும். கருணாநிதி 2 ஏக்கர் நிலம் தருகிறோம் என்று சொன்னார். கொடுத்தாரா? கொடுக்க முடியுமா? இது சொன்னதை செய்வேன் என்று கூறிக் கொள்கிறார்.,என அருப்புக்கோட்டையில் நடிகர் செந்தில் பேசினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!