Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 17, 2012

சென்னை மெரினாவில் காதல் ஜோடியிடம் காசு கறந்த வாலிபர்கள் ?

சென்னை: மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளை குறிவைத்து ஒரு கும்பல் பணம் பறிப்பதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுபற்றி கமிஷனர் திரிபாதியிடமும் நேரில் சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடற்கரையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கிழக்கு மண்டல இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் புகழேந்தி ஆகியோர் ஆலோசனையின் பேரில் மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்தார். நேற்று இரவு கடற்கரையில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஸ்டீபன் கென்னடி என்பவர் காற்று வாங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த காதல் ஜோடிகளிடம் சிலர் போலீஸ் என்று மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த ஸ்டீபன் கென்னடி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாண்டி ஸ்டீபன் கென்னடி தகவலின் பேரில் கலங்கரை விளக்கம் அருகில் சென்றார். அங்கு 3 வாலிபர்கள் பணம் பிடுங்கியதை நேரில் பார்த்தார். உடனே அவர்களை கையும் களவுமாக பிடித்தார்.

2 comments :

என்ன பன்னுனாலும் இவங்க திருந்த மான்டாங்க பாஸ். என்னமோ இந்தியாவை அமெரிக்கா அளவுக்கு உயர்த்தறதா இவங்களுக்கு நினைப்பு.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!