Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, April 14, 2011

மீண்டும் வம்பிழுக்கும், வடிவேல்!!

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் நடிகர் வடிவேலு, அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் 13.04.2011 அன்று விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சாலிகிராமம், கே.கே.சாலை காவேரி உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடியில், நடிகர் வடிவேலு ஓட்டளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, நலத்திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம், இத்தேர்தலில் தி.மு.க., அமோகமாக வெற்றி பெறும். ஏழை, எளிய மக்களுக்கு முதல்வர் கலைஞர் நிறைய நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்.

குறிப்பாக வியாபாரிக்கு தான் தொழில் செய்யத் தெரியும்; விவசாயிக்கு தான் உழத் தெரியும். மன்னனுக்கு தான் ஆளத் தெரியும்; அந்த மன்னன் முதல்வர் கலைஞர் தான். அவர் ஆறாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணி. எதிரணி கூட்டணி வெத்து கூட்டணி என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!