Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, April 29, 2011

அடுத்த முதல்வரும் கருத்து கணிப்பும், மு.க பதில்?

சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தது. இந்த நிலையில், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை மற்றொரு தனியார் தொலைக்காட்சி இப்போது வெளியிட்டுள்ளது. இந்தக் கணிப்பில், திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புகளில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தக் கருத்துக் கணிப்பு சரியாக இருக்குமேயானால் தொடர்ந்து அடுத்தடுத்து பத்திரிகை சார்பில் செய்யப்படுகின்ற கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை வைப்பேன்.

திமுக என்பது ஒரு இயக்கம். திராவிட இயக்கத்தின் மீது மக்களுக்கு ஓர் ஆர்வமும், அக்கறையும் உள்ளது. இது வெறும் இயக்கமாக மாத்திரம் இல்லாமல் ஆளுங்கட்சியாக வந்து மக்களுக்கு அண்மைக் காலத்தில் பல சாதனைகளைச் செய்து முடித்து இருக்கின்றது. நம்பகத் தன்மை வாய்ந்த கட்சியாக மக்களுக்கு இது இருக்கின்றது. தேர்தல் முடிவுக்குப் பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப திமுக முடிவெடுக்கும்.

கூட்டணி ஆட்சி என்பது கூடாது என்றல்ல; கூட்டணி ஆட்சிதான் மத்தியிலே நடக்கின்றது. ஆட்சிக்கு வந்தால் நான் முதல்வராக வருவேனா? அல்லது ஸ்டாலின் முதல்வராக வருவாரா? என்றெல்லாம் இப்போதே கூற முடியாது. அதெல்லாம் எங்கள் கட்சியின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!