Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 18, 2011

காவல் காக்க ஆணை? கலக்கத்தில் அதிகாரிகள்!!

ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவம், சிறப்பு போலீஸ் படை, தமிழக அதிரடிப்படை, உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மாவட்ட மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர்கள், கூட்டுறவு இணைப்பதிவாளர், கால்நடை, விவசாயத்துறைகளின் இணை இயக்குனர்கள், ஊராட்சி உதவி இயக்குனர், பல துறைகளில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், ஓட்டு எண்ணிக்கை மையங்களை தினமும் சுற்றி வந்து கண்காணிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு அதிகாரியும் காலை 8 முதல் இரவு 8 மணி வரையும், இரவு 8 முதல் காலை 8 மணி வரையும் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறுகள் நடந்தால் அன்று பணியில் இருக்கும் அதிகாரிகளே பொறுப்பு என்பதால் கண்காணிப்பு அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!