Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, April 26, 2011

ஓட்டு எண்ணிக்கை துவக்கம்

திண்டுக்கல் : ஓட்டு எண்ணிக்கையை மே 13ம் தேதி காலை 7.30 மணிக்கு துவங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கடந்த 13ல் பதிவான ஓட்டுக்கள் மே 13ம் தேதி எண்ணப்படுகின்றன.

தொகுதி தேர்தல் அதிகாரி (ஆர்.ஓ.,) முன்னிலையில் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு எண்ணிக்கை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தபால் ஓட்டுக்களை காலை 7.30 மணிக்கு துவங்க வேண்டும். காலை 8 மணிக்குள் எண்ணிக்கை முடியாத பட்சத்தில், இப்பணியை உதவி தேர்தல் அதிகாரியிடம் தர வேண்டும்.

மிஷின்களில் பதிவான ஓட்டுக்களை காலை 8 மணிக்கு தேர்தல் அதிகாரி துவங்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்க ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. தற்போது, காலை 7.30 மணிக்கு எண்ணிக்கை துவங்க ஆலோசனை தரப்பட்டுள்ளது. தபால் ஓட்டுக்கள் முதலில் எண்ணப்படுகின்றன' என்றார்.

1 comments :

எல்லாம் நன்றாக நடந்தால் சரிதான் ...........

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!