Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, April 1, 2011

அனைத்து அதிகாரமும் உண்டு? ஐகோர்ட்! (வாக்குப்பதிவு நேரம் மாற்றம்)

தேர்தல் கமிஷன் சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது என்றும், சோதனை என்ற பெயரில் மக்களை துன்புறுத்துவதாகவும் எனவே தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். இதன் படி தேர்தலை நியாயமாக நடத்தும் வகைக்கு தேர்தல் கமிஷனுக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்றும் , கமிஷன் எடுக்கும் நடவடிக்கை அதிகாரத்தில் தலையிட முடியாது என்றும் , அ‌தே‌நேரத்தில் நடத்தப்படும் சோதனைகள் தொடர்பாக உரிய ஆவணங்கள் பராமரித்து கொள்ளப்பட வேண்டும் என்றும், இத்துடன் பணம் பட்டுவாடா, பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை தடுக்க கமிஷனுக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் ஓட்டளிப்பு நேரம் மாற்றம், வழக்கமாக ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முறை காலை ஒரு மணிநேரம் தாமதமாக துவங்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது, இதன்படி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!