Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 16, 2011

முரசை , வரவேற்கும் பெண்கள்!!

தமிழக சட்டசபை தேர்தலில் பல தொகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக பெண்கள் ஓட்டளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளளர். குறிப்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் ஆண்களை விட கூடுதலாக 12 ஆயிரத்து 475 பெண்கள் ஓட்டளித்துள்ளனர். ரிஷிவந்தியம் தொகுதி ஓட்டுப்பதிவு விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள் -2,06,725 பதிவானவை - 1,71,067 ஆண்கள் - 79,296 பெண்கள் - 91,771 எனவே இந்த தேர்தலில் தமிழகமே பரபரப்புடன் எதிர்நோக்கும் தொகுதிகளில் ஒன்றான ரிஷிவந்தியம் தொகுதியின் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

சினிமாவில் கதாநாயகனாக நடித்து நகர்புறத்தை விட கிராமப்புற ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்றுள்ள விஜயகாந்துக்கு ரிஷிவந்தியம் தொகுதி தேர்தலில் பெண் வாக்காளர்களின் ஆதரவு அதிகம் உள்ளதா? என்பது ஓட்டு எண்ணிக்கை நாளான வருகிற 13-ந்தேதி தெரியவரும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!