Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, April 17, 2011

தொட்டியும் ஆட்டுவார்கள் பிள்ளையும் கிள்ளுவார்கள்??

சென்னை : தமிழக மீனவர்கள் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசை கண்டித்து சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்தன. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் பல நேரங்களில் உறுதியளித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் நின்றபாடில்லை.

தற்போது நான்கு மீனவர்கள் சிங்களப் படையினரால் கடுமையாக தாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு, சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு, தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு தங்கபாலு தெரிவித்துள்ளார். பதவியில் இருக்கும் இவர்கள் எதையும் செய்யவில்லை போராட்டம் என்கிற கண் துடைய்ப்பு.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!