Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 2, 2011

வடிவேலுடன் மினி பேட்டி?

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்த தேர்தல் அடிதடி வழக்கால், மதுரை சிறையில் உள்ள ரித்தீஷ் எம்.பி.,யை காமெடி நடிகர் வடிவேலு நேற்று மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை சந்தித்து பேசினார். பின், சிறை வளாகத்தில் அவர் கூறியதாவது தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும். நான் ஏழையாக இருந்தவன். அந்த கஷ்டம் தெரியும். வசதி படைத்தவர்களுக்கு அது தெரியாது. இதனால்தான் ஏழை மக்களுக்கு கருணாநிதி அறிவித்த திட்டங்களை உணர்ந்து பிரசாரம் செய்கிறேன்.

ஓட்டுரிமை இல்லாதவர்களுக்குகூட கருணாநிதியின் திட்டங்கள் போய் சேருகின்றன. ஆனால், இதெல்லாம் ஏன் செய்கிறார் என்று ஒரு ஆளு கேட்கிறான், என்றார். மதுரைக்கு திடீர் விசிட் ஏன்?நான் அம்மாவை பார்க்க... அதாவது என்னை பெத்த அம்மாவை பார்த்து திருநீறு வாங்க வந்தேன். ஏப்.,1 முதல் தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்து, என் சொந்த பந்தங்களை எல்லாம் பார்ப்பேன். என் வாழ்க்கையே காமெடிதாங்க. திருவாரூர் பிரசார கூட்டத்தில், விஜயகாந்த் குறித்து நீங்கள் பேசியது அநாகரீகமானது இல்லையா? எதுங்க அநாகரீகம். நான் என்ன அசிங்கமாவா பேசினேன். தப்பு தப்பா பீல் பண்ணாதீங்க.

விஜயகாந்த்தை பற்றி நீங்கள்...கேள்வியை முடிப்பதற்குள் இடைமறித்த வடிவேலு, "யாருங்க அவரு. ஒரு ஆளு கருப்பு எம்.ஜி.ஆர்., கேப்டன் சொல்றாரு. அந்த ஆளை பற்றிதான் பேசுவேன். பாவம் ஒரு அப்பாவி வேட்பாளரை மக்கள் மத்தியில் அடிக்கும் அந்த ஆளுக்கு தலைவனுக்குரிய தகுதி கிடையாதுங்க. அந்த கட்சி தொண்டர்கள் நல்லவங்கதான். இந்த ஆளுதான் சரியில்லை.அவரை பற்றி பேசுவதால் உங்களுக்கு மிரட்டல் வந்ததா?எனக்கா மிரட்டல். என்னை பார்த்துதான் அந்த ஆளு பயப்படுறாரு. எவ்வளவு திட்டினாலும் தாங்குறாரு. படவாய்ப்பு, ஷூட்டிங் இல்லாததால் கடையை (கட்சியை) ஆரம்பிச்சிருக்கிறாரு.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!