Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, April 22, 2011

தோனிக்கு, உலகில் 52 வது இடம், டைம்ஸ்?

நியூயார்க் : நியூயார்க்கில் இருந்து வெளியாகும் டைம் வார இதழ் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய கிரிக்கெட் அணியின் மகேந்திர சிங் தோனிக்கு 52-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. டைம் இதழின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியிலில் இடம்பெற்றுள்ள இரண்டாவது விளையாட்டு வீரர் தோனி. கடந்த ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சச்சின் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் ஒபாமா 87-வது இடத்திலும், ஆர்ஜென்டீனாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 88-வது இடத்திலும் உள்ளனர். ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 43-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டைம் இதழில் கூறப்பட்டிருப்பதாவது, தோனி, இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளார். பணிவான குணம், பதற்றமில்லாமல் நம்பிக்கையோடு விளையாடுவது ஆகியவற்றாலேயே அவரை அனைவரும் விரும்புகின்றனர்.

அவரின் திறமை பிரமிக்க வைக்கிறது. இந்தியாவில் சாதனை படைத்தவர்கள் எல்லாமே மிகப்பெரிய குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள். ஆனால் தோனி இவை எதுவும் இல்லாமல் சிறிய நகரில் இருந்து வந்த தனது திறமை ஒன்றால் மட்டுமே சாதித்தவர்' என்று எழுத்தாளர் சேதன் பாகத் தெரிவித்துள்ளார்.

தோனி கிரிக்கெட் அணிக்கு தலைமை மட்டும் வகிக்கவில்லை. நம்பிக்கையான கேப்டன் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அவர் இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்ததோடு, வெற்றிபெறுவதையும் கற்றுக்கொடுத்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!