Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, January 11, 2011

சாத்தான் வேதம் ஓதும்!!!

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தீவிரவாதிகளுக்கு இடமில்லை என அதன் தேசிய தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சிலருக்கு தீவிரவாத சிந்தனையுண்டு. இவர்களிடம் அமைப்பை விட்டு வெளியேறுமாறு கோருவோம்.

மக்கா மஸ்ஜித், அஜ்மீர், மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளுடன் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எவ்வித தொடர்புமில்லை. இத்தகைய பிரச்சாரங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஆர்.எஸ்.எஸ் ஒரு குறிப்பிட பிரிவினருக்கு உரியது அல்ல. எல்லா பிரிவினரையும் ஐக்கியப்படுத்துவதுதான் அமைப்பின் நோக்கம். ஹிந்துத்துவம் என்பது எங்களது தனிப்பட்ட கொள்கை.

சி.பி.ஐக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுநேர ஊழியரான பயங்கரவாதி அஸிமானந்தா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்புகள் குறித்த குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேஜஸ்

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!