Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 29, 2011

தங்கம் பரிசு! இந்தியச் சிறுமிக்கு

துபை ஜன.29 : துபையில் இப்போது அங்காடித் திருவிழா நடைபெறுகிறது. அங்கே கடைகளில் நாம் வாங்கும் ஒவ்வொரு விலையுயர்ந்த பொருளுடனும் பரிசுக் கூப்பன் கொடுக்கிறார்கள். அதில் சிறப்புப் பரிசுக்குரியவரை அன்றாடம் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

கேரளத்தைச் சேர்ந்த சாஜு மேத்யு தன்னுடைய மனைவி எல்மாவுடன் இந்த அங்காடித் திருவிழாவுக்குச் சென்றார். சில பொருள்களை வாங்கிய பிறகு தன்னுடைய 4 வயது மகள் ஜேஸ் எல்மா மேத்யூ பெயரில் பில் போடச் சொன்னார். எனவே கடைக்காரர்கள் அவருடைய மகள் பெயரிலேயே கூப்பன்களைப் பூர்த்தி செய்து அளித்தார்கள். அந்தப் பரிசுக் கூப்பன்களைக் குலுக்கலில் சேர்த்து குலுக்கியதில் ஜேஸ் எல்மா மேத்யூவுக்கு அரை கிலோ தங்கம் பரிசாகக் கிடைத்தது.

இந்தத் தகவல் கிடைத்ததும் சாஜியும் அவருடைய மனைவியும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தியர்களுக்குத் தங்கம் என்றால் உயிர். எனக்குப் பிறந்தவள் பெண் குழந்தையாக இருப்பதால் திருமணத்துக்கு தங்க நகை போட்டாக வேண்டும். இந்த அரை கிலோ தங்கம் எங்களுக்குப் பேருதவியாக இருக்கும். துபையில் இருக்கும்வரை இத்தகைய அங்காடித் திருவிழாக்களில் கட்டாயம் கலந்து கொள்வோம். எங்களுடைய குடும்பத்தில் இதுவரை யாருக்கும் லாட்டரி மூலம்கூட அதிருஷ்டப் பரிசு கிடைத்ததில்லை, என்னுடைய மகள் அதிருஷ்டக்காரி என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினர் சாஜுவும் எல்மாவும்.

துபை செல்ல வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் பரிசு பெறலாம். பிப்ரவரி 20 வரை இந்த அங்காடித் திருவிழா நடைபெறுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!