Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 8, 2011

பொங்கலுக்கு விடுமுறை : கருணாநிதி வலியுறுத்தல்

கேரள மாநில எல்லையோர பகுதிகளான பாலக்காடு, திருவனந்தபுரம், இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், கேரள அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என, பாலக்காட்டில் உள்ள, "கேரள மாநில தமிழ் பாதுகாப்பு குழு' வலியுறுத்தி வருகிறது.தமிழகத்தில் சென்னை, நீலகிரி, கன்னியாகுமரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், மலையாள மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக, தமிழக அரசு ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின் போது உள்ளூர் அரசு விடுமுறை அறிவித்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

எனவே, கேரள மாநில தமிழ் பாதுகாப்பு குழுவின் கோரிக்கையை பரிசீலனை செய்து, பொங்கல் பண்டிகைக்காக உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!