Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, January 4, 2011

ஊர் நாறும் எம் எல் ஏ?

பிகாரில் பாஜக எம்எல்ஏ ராஜ்கிஷோர் கேஷரி கொல்லப்பட்டது துயரமானது எனத் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது. 

இந்தக் கொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது துயரமான சம்பவம். இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிகார் மாநில காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் பிரேமச்சந்திர மிஷ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தன்னை எம்எல்ஏ பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நடந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாட்னா உயர்நீதிமன்றத்தில் தற்போது பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டோ அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டோ விசாரணை நடத்த வேண்டும். பாலியல் புகார் அளித்திருந்தும் எம்எல்ஏவை சந்திக்க அந்தப் பெண் எந்தக் காரணங்களினால் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து சுயேச்சையான விசாரணை ஒன்றும் நடத்தப்பட வேண்டும் என பிரேமச்சந்திர மிஷ்ரா தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!