Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, January 17, 2011

தலை இல்லா முண்டம் போல் நம் இலங்கை தமிழர்கள்!

இலங்கை தமிழர்கள் தலை இல்லா முண்டம் போல் தலைவர் இல்லாமலும், தமிழகத்தில் குரல் கொடுக்க யாரும் இல்லை என இலங்கை தமிழர்கள் ஆதங்கப்படுகின்றனர், என சர்வதேச தமிழ் எழுத்தாளர் சங்க இந்திய கிளை தலைவர் சுந்தரராஜன் கூறினார்.

இலங்கை கொழும்பு நகரில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடந்தது. தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடாகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து 45 எழுத்தாளர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் சங்க இந்திய கிளை தலைவர் சுந்தராஜன் கூறியதாவது: இலங்கை தமிழர்கள் தலையில்லா முண்டம்போல், தலைவர் இல்லா தேசமாக ஒருதுளிகூட முன்னேற்றமில்லாமல் வாழ்ந்துவருகின்றனர். தமிழகத்திலும் குரல் கொடக்க யாரும் இல்லை. யாழ்பாண தமிழர்களுக்காக போராட பல அமைப்புகள் உள்ளன. அவர்கள் போராடுவது எல்லாம் அவர்களது சுதந்திரத்திற்கு மட்டும்தான் .மலை தமிழர்களுக்காக போராடவில்லை. ஈழத்தமிழர்களுக்காக போராடுவது போல் ஒரு மாயை உருவாக்கி ஏமாற்றிவருகின்றனர். உண்மையில் யாழ்பாண தமிழர்கள் நன்கு வசதியுடன் தொழில், அரசு வேலை என நல்லநிலையில் உள்ளனர். புலிகள் இயக்கத்தால் நிரந்தர துன்பத்திற்கு தள்ளபட்டதாக வருந்துகின்றனர். ஒருசில அமைப்புகளின் சுயநலபோக்கினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கல்வியில்கூட வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. கீழ்மட்ட மக்கள் கல்விக்காக ஏங்கும் நிலையில் உள்ளனர் .இதுதான் அங்குள்ள உண்மை நிலவரம் என்பதை அங்குள்ள தமிழர்களிடம் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டோம், என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!