Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 2, 2011

இணையதளம் மூலம் வங்கி கணக்கு பணப்பரிமாற்றம்

இணையதளம் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் (இ-ஃபண்ட்) செய்ய வங்கி கணக்கு எண்ணை மட்டும் பயன்படுத்தினால் போதும். கணக்கு வைத்திருப்பவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தேவையில்லை.  இணையதளம் மூலம் பணப்பரிமாற்றம் வேகமாக நடைபெற வேண்டும். பரிமாற்றம்  செய்வதை எளிதாக்குவது, இந்த சேவையை மேலும் பலரும் பயன்படுத்தும் வகையில் இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வழிகாட்டுதலின் பேரில் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. இணையதளம் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போது அதனைப் பயன்படுத்துபவர்கள் இரண்டு முறை வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்தவுடன் பணப்பரிமாற்றம் எளிதாக நடைபெறும். கணக்கு வைத்திருப்பவரின் பெயர், வங்கிக் கிளை போன்ற விவரங்கள் தேவைப்படாது.


பெயர், வங்கிக் கிளை போன்றவற்றை சரிபார்த்து பணம் அந்த கணக்கில் சென்றடைய காலதாமதம் ஏற்படுகிறது. இனி இந்த காலதாமதம் ஏற்படாது. இந்தியாவில் ஒரே பெயர் பல்வேறு எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவதால், சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனாலும் பெயரைக் குறிப்பிடும் முறை நீக்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!