Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 9, 2011

தூக்குவதும்,.. தூக்கி எரிவதும் நம் கலை!

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடந்தது. முதல் நாள் ஏலத்தில் இந்தியாவின் காம்பிர் அதிகபட்சமாக ரூ. 11.04 கோடிக்கு ஏலம் போனார். நேற்று ஆஸ்திரேலியாவின் அறிமுகம் இல்லாத இளம் "ஆல் ரவுண்டர்' டேனியல் கிறிஸ்டியனுக்கு(27) பலத்த போட்டி காணப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்காக 3 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் சிறப்பான பீல்டர். இவரை தட்டிச் செல்ல கொச்சி, டெக்கான் அணிகள் மாறி, மாறி ஏலத்தொகையை அதிகரித்துக் கொண்டே சென்றனர். முடிவில் 4.14 கோடி ரூபாய் கொடுத்து இவரை டெக்கான் அணி தட்டிச் சென்றது. முதலில் கிறிஸ்டியனுக்கு அடிப்படை விலையாக 23 லட்சம் மட்டுமே இருந்தது. இறுதியில் இதைவிட 18 மடங்கு அதிகமான தொகை கிடைத்தது. இதேபோல வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவை, டில்லி அணிரூ. 3.40 கோடிக்கு வாங்கியது. மூன்றாவது அதிகபட்சமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல், ரூ 3.17 கோடி கொடுத்து மும்பை அணி பெற்றது. தவிர, உள்ளூர் போட்டிகளில் அசத்தும் வேணு கோபால் ராவ் (டில்லி) 3.17 கோடி ரூபாய் பெற்றது, வியப்பாக இருந்தது.


கங்குலி பரிதாபம்: நேற்றைய ஏலத்தின் முடிவில், இரண்டாவது சுற்றில் 10 அணிகளின் உரிமையாளர்கள் விருப்பத்தின் பேரில் 28 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதிலும் கங்குலி இடம்பெறவில்லை. இதையடுத்து, ஐ.பி.எல்., போட்டிகளில் கங்குலியின் பங்கேற்பு முடிவுக்கு வந்துள்ளது. இதேபோல, ஜெயசூர்யா, கெய்ல், லாரா, பவுச்சர், சுவான் ஆகியோரும் 2வது சுற்று ஏலத்தில் இல்லை.

"லக்கி' கைப்: முதல் சுற்று ஏலத்தில் முகமது கைப் ஏலத்தில் எடுக்கப் பட வில்லை. 2வது சுற்றிலும் இவரை எடுக்க யாரும் முன்வரவில்லை. இதற்கு பின் புனே, டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் கைப் வேண்டும் என கேட்டன. இறுதியில் மல்லையா (பெங்களூரு), ரூ. 59 லட்சம் கொடுத்து கொண்டு சென்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!