Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 2, 2011

மீண்டும் நித்தியானந்தா,ரஞ்சிதா

பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு நடிகை ரஞ்சிதா வந்து, நித்தியானந்தா சாமியாரிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் பிடுதி ஆசிரமத்தில் ‌சாமியாரின் 34வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நித்தியானந்தாவின் சொற்பொழிவை ‌ஆர்வமுடன் கேட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ரஞ்சிதாவும், அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் கலந்து கொண்டு நித்தியானந்தாவிடம் ஆசி பெற்றனர்.

சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகை ரஞ்சிதா, அங்கிருந்தபடியே வக்கீல்கள் மூலம் தனது கருத்தை மீடியாக்களிடம் பகிர்ந்து வந்தார். 

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதன் முறையாக அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது , நான் நித்தியானந்தாவின் லட்சக்கணக்கான பக்தர்களில் ஒருத்தி. ஆசிரத்திற்கு மீண்டும் சென்று ஆசிர்வாதம் ‌பெறுவேன், என்று கூறியிருந்தார். இந்நிலையில்தான் அவர் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்றிருக்கிறார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!