Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, January 6, 2011

காவி நாடகம்போடும் பா ஜ க

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்; மறுத்தால், விவசாயிகளின் கள் இறக்கும் போராட்டத்துக்கு தமிழக பா.ஜ., முழு ஆதரவு தரும்,'' என பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். ஏழை இந்து மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும், நதி நீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும், கோவில் வருமானத்தை ஆன்மிக வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தாமரை யாத்திரை நடக்கிறது. சூலூர் பஸ் ஸ்டாண்ட் வந்த யாத்திரையை ஒன்றிய அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் தொண்டர்கள் வரவேற்றனர்.

அப்போது, பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழத்தில், ஏழைகளுக்காக தொடர்ந்து இலவச திட்டங்கள் வழங்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால், அரசே "டாஸ்மாக்' மூலம் உள்நாடு, வெளிநாட்டு மதுவை விற்கிறது. கூலித் தொழிலாளர்கள் அதிகளவு பணத்தை மது குடிப்பதற்காக செலவு செய்கின்றனர். மது குடிப்பதால் மக்கள் நோயாளிகளாகவும் மாறி வருகின்றனர். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். 

குறிப்பு : எல்லாம் சரி உங்க ஆட்சியல செய்வீங்களா?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!