Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, January 24, 2011

கிறிஸ்டன் பணி தொடருமா?

உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ்டன் விலகுவது உறுதியாகியுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தமானவர் தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன். இவரது பயிற்சியில் இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் நம்பர்-1' இடத்தை பெற்றது. ஒருநாள் வரிசையில் 2ம் இடம் பெற்றது. இதனிடையே, வரும் உலக கோப்பை தொடருடன், கிறிஸ்டனின் பதவிக்காலம் முடிகிறது.
இதற்குப் பின், தனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதால், பதவியில் நீடிக்க விருப்பமில்லை என கிறிஸ்டன் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) நிர்வாகி ஒருவர் கூறியது

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கிறிஸ்டன் பயிற்சியாளராக தொடர வேண்டும் என அனைவருமே விரும்புகின்றனர். ஏனெனில் இவரது பயிற்சியில் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை பெற்றது. இந்த வெற்றிகள் அனைத்திலும் அவருக்கும் பங்குள்ளது. அணியில் ஒற்றுமை ஏற்படுத்தி, வலிமையானதாக மாற்றினார்.

மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து அவரிடம் நீண்ட நேரம் பேசினோம். ஆனால், உலக கோப்பை தொடருக்குப் பின், பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவில் உறுதியாக உள்ளார். குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்ற, அவரது முடிவுக்கு நாங்கள் மரியாதை தருகிறோம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!