சென்னை, செப்.23 : திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை கண்காணிப்பதற்காக 3 பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் திருச்சி வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் ,தமிழ்நாட்டில் 18 வயது முடிந்தவர்கள் அடுத்த மாதம் 24-ந் தேதி தொடங்கும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தார் .
0 comments :
Post a Comment