Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, September 28, 2011

கொல்லுதே பாடகியை பாராட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் !

இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர், நடிப்போடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர் படங்களுக்கு இசையமைக்கவும் செய்ய வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஸ்ருதிஹாசனின் இசை மிகவும் அருமையாக இருந்தது. அவரது இசை, என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. இசைமட்டுமல்லாது, அவருக்கு இயற்கையிலேயே நல்ல குரல் வளமும் உள்ளது.

"வாரணம் ஆயிரம்" படத்தில் அவர் பாடிய அடியே கொல்லுதே... என்ற பாடலை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். இந்தியாவில் உள்ள தலைசிறந்த பாடகர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. ஸ்ருதி, நடிப்போடு மட்டும் நின்றுவிடாமல், தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்கவும் செய்ய வேண்டும் என்று தனது பேட்டியில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!