Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, September 22, 2011

பாசிச ஜெயா வுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் பாஸ்வான்

செய்தியாளர்களிடம் பாஸ்வான் கூறியது., பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து பல நாள்கள் ஆன பிறகும் முதலமைச்சர் ஜெயலலிதா அங்குச் செல்லவில்லை., பாசிச போக்கையே அறிவுருத்துகிறது, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. அங்கு என்ன நடந்தது என்பதை ஆராயாமல் போலீஸôருக்கு சாதகமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காவல் துறை கைகளில் துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டிருப்பது, பொது மக்களை துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கு அல்ல. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு அவர்களை பாதுகாப்பதை விட்டவிட்டு கலவரத்தை சமாளிக்க முடியாமல் துப்பாக்கி மூலம் உயிர்களை பறித்தது கடைந்தெடுத்த பாசிச பயங்கரவாதம்.

இது தமிழ்நாடு அளவிலான பிரச்னை மட்டும் இல்லை. தேசிய அளவிலான பிரச்னை., சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி, செப்டம்பர் 30-ல் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைப்போம்.

தமிழ்நாடு சமூக நல்லிணக்கம் போற்றப்பட்டு வந்த மண்.,மேலும் இந்த பாசிச வாதிகளை ஆட்சியில் வைத்திருப்பது அதிக ஆபத்து இங்கு இனிமேலும் இதுபோன்றச் சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!