Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, September 2, 2011

இந்தியாவுக்கு வருத்தம் தெரிவித்த யு எஸ் !

வாஷிங்டன் : அமெரிக்க விமான நிலையங்களில், பாதுகாப்பு என்ற பெயரால் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு, அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு, அமெரிக்க விமான நிலையம் ஒன்றில், பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கரை, பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதேபோல், ஹூஸ்டன் விமான நிலையத்தில், ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரியை, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, 30 நிமிடங்கள் தாமதப்படுத்தினர். அவரது டர்பனை கழற்றச் செய்து சோதனையிட்டனர்.

இதுகுறித்து நேற்று, அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில்,"இந்திய தூதர்களின் முக்கியத்துவம், உயர் நிலையை அறிந்துள்ளோம். அவர்களுக்கு நேர்ந்த சிரமங்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். எனினும், சில சிறப்பு பாதுகாப்பு பரிசோதனைகளை நாங்கள் செய்யத் தான் வேண்டியிருக்கிறது' என்றார்.

**இந்திய அதிகாரிகளும்தான் இருக்கிறார்கள் தன் நாட்டு மக்களையே மதிக்கத்தெரியாதவர்கள்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!