Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 5, 2011

விண்கலம் மூலம் சரக்கு போக்குவரத்து நாசா !!

நியூயார்க், : அமெரிக்காவில் கடந்த 1920 முதல் 1930-ம் ஆண்டு வரை விண்கலங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து நடந்தது. அப்போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துகள் நடந்தது இந்நிலையில் 1937-ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ஹின்டென்பார்க் நகரில் மிகப்பெரிய விபத்து நடந்தது. அதில், 36 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து விண்கலம் மூலம் சரக்குகளை அனுப்புவது நிறுத்தப்பட்டது.

தற்போது அவை லாரிகள், ரெயில்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பெருமளவில் அனுப் பப்படுகின்றன. இதனால், கூடுதல் நேரமும் அதிக பொருட்செலவும் ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலும் உருவாகிறது. இதை தடுக்க மீண்டும் விண்கலம் மூலம் சரக்குகளை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்காக மிகவும் பாதுகாப்பான பலூன் போன்ற விண்கலத்தை அமெரிக்காவின் “நாசா” மையம் வடிவமைத்து வருகிறது.

இதற்கு முன்பு சுருட்டு வடிவலான சரக்கு விண்கலம் இருந்தது. தற்போது, இது கட்டை வடிவில் மிகவும் சக்திவாய்ந்த வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சரக்கு விண்கலத்தின் முன்மாதிரி வடிவம் அடுத்த ஆண்டில் தனது சோதனை ஓட்ட பயணத்தை தொடங்க உள்ளது. வருகிற 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் இது செயல்பட தொடங்கும். இதன் மூலம் நூற்றுக்கணக்கான டன் சரக்குகள் ஏற்றுமதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!