Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, September 28, 2011

லண்டனில் பிடிபட்ட 27 இந்தியர்கள் ! நிறுவனத்திற்கு அபராதம் !!

லண்டன், செப். 28 : வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து பணியாற்றுபவர்கள் அந்நாட்டு சட்டவிதிகளுக்கேற்ப சில நடைமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.

இந்நிலையில் உரிய அனுமதியின்றி வெளிநாட்டவர் பலர் லண்டன் கம்பெனிகளில் வேலை செய்துவருகின்றனர் என்று புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து லண்டன் குடியுரிமை அதிகாரிகள் கடந்த 2 வாரங்களாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது லண்டன் மேற்கு பகுதியில் உள்ள ஆசியன் சூப்பர் மார்க்கெட்டில் உரிய அனுமதியின்றி பணியாற்றிய 25 பேர் பிடிபட்டனர். இதில் 23 பேர் இந்தியர்கள். இதே போன்று லண்டன், மான்செஸ்டர் பகுதியில் கட்டுமானப் பணியாற்றிய 4 இந்தியர்கள் பிடிபட்டனர். அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது.

அவர்களை பணியமர்த்திய நிறுவனங்களுக்கு ஊழியர் ஒருவருக்கு தலா ரூ. 7.5 லட்சம் என்ற வீதத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!