Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, September 16, 2011

உணர்வு தூண்டப்படும் உண்ணா விரதம்?

மாதத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் கடைபிடித்தால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உண்ணாவிரதம் தொடர்பாக யுடா பகுதியைச் சேர்ந்த 200 நபர்களின் ஆரோக்கியம் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் போது நடத்தப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளாத நபர்களில் 75 சதவீதத்தினருக்கு ஆர்ட்ரிஸ் ரத்தக்குழாய்கள் குறுகி இருப்பது தெரியவந்தது.

ஆர்ட்ரிஸ் ரத்தக்குழாய்கள் இதயத்தில் இருந்து உடலின் இதர உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய் ஆகும். ஆர்ட்ரிஸ் குழாய்கள் குறுகினால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புகள் ஏற்படலாம். அடிக்கடி உணவை தவிர்த்த நபர்களில் 63 சதவீத பேருக்கு ஆர்ட்ரிஸ் குழாய் அடைப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

உண்ணாவிரதத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்வதால் நீரிழிவு விகிதத்தை குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. உண்ணாவிரதம் மேற்கொள்ளாத நபர்களிடம் இரண்டாவது கட்ட சோதனையை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதம் இருப்பதால் மனித வளர்ச்சிக்கு தேவையான ஹோர்மோன் குறிப்பிட்ட அளவு தூண்டப்படுகிறது. மனித உடலில் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி கொழுப்பை குறைக்க உதவுகிறது. கொழுப்பு குறைவதால் இதய நோய்களை தவிர்க்கலாம்.

இது ஆயிவில் கூறபட்ட தகவல் ஆனால் இதை நோன்பு என்றும் இதனை வருடத்தில் ஒரு மாதமும், மாதத்தில் மூன்று நாள்களும் கடைபிடிப்பதால் உடல் ஆரோக்கியத்துடனும், மற்றவர்களின் பசியை உணரக்கூடிய மன நிலையும் அதனால் மற்றவர்களின் கஷ்டத்திற்கு உதவும் மனோபக்குவமும் உண்டாகும் என்று இஸ்லாமியர்களின் இறுதி தூதர் முஹம்மது நபி 1400 வருடத்திற்கு முன்பே கூறியிருக்கிறார்கள் அதை தான் இன்று ஆய்வில் கண்டு பிடித்தும் உள்ளார்கள்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!