Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, September 18, 2011

விலை போன கேப்டன் வாங்கிக்கொண்ட தலைவி? தொண்டர்களிடையே சலசலப்பு !?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 6 பேர் பலியானார்கள். இதில் பலத்த காயம் அடைந்து மதுரை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பரமக்குடிக்கு நேரில் சென்று துப்பாக்கி சூட்டில் பலியான குடும்பத்தினரை சந்தித்து நிதி உதவி அளித்து வருகின்றனர். மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் அறிவித்து உள்ளனர்.

ராமநாதபுரம் அடுத்த காரனேந்தல் கிராமத்தை சேர்ந்த தலித் சமுதாயத்தை சேர்ந்த தே.மு.தி.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தே.மு.தி.க. தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலை வருமான விஜயகாந்த் இதுவரை பரமக்குடி வராததை கண்டித்து அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை காரனேந்தல் தே.மு. தி.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறாததை கண்டித்தும்,

கலவரம் குறித்து மவுனம் சாதித்து வருவதை கண்டித்தும் தே.மு.தி.க. கிளை செயலாளர் முருகேசன் தலைமையில் தொண்டர்கள் தே.மு.தி.க கொடி கம்பங்களை வெட்டி சாய்த்தனர். மேலும் உறுப்பினர் கார்டு, கொடிகளை தீயிட்டு எரித்தனர். விஜயகாந்த்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்., கேப்டன் "ஜெயா" விடம் விலைபோகிவிட்டரா என்று தொண்டர்களுக்கு சந்தேகம் வந்தவிட்டது இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

அதேபோல காவனூரில் கிளை செயலாளர் சசிகுமார் தலைமையிலும், வன்னிவயலில் ஒன்றிய துணைத்தலைவர் ரவீந்திரன் தலைமையிலும் தே.மு.தி.க. கொடிகளை எரித்தனர்., இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!