Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, September 20, 2011

காப்பி பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி !

லண்டன், செப். 20 : லண்டனில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு, காபி பிரியர்களுக்கு மட்டுமல்ல, காபி கடை உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் காபி குடிப்பதால் ஏற்படும் சாதக, பாதகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

1960-ம் ஆண்டு முதல் பல லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளையும் இவர்கள் அடிப்படையாக எடுத்துக்கொண்டனர்., அதில் கண்டறியப்பட்ட முடிவுகள் குறித்து "டெய்லி எக்ஸ்பிரஸ்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது., தினமும் ஒரு கோப்பை காபி குடித்தால் மூளை நாளங்களில் ரத்தம் உறையும் அபாயம் 14 சதவீதம் வரை குறைகிறது.

மூன்று முதல் நான்கு கோப்பை காபி குடிப்போருக்கு 17 சதவீதம் வரை இந்த அபாயம் குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது., தேநீர் போன்ற பானங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் என்ற வேதிப்பொருள் உள்ளது. இவை பக்கவாதம் போன்ற அபாயங்களை தடுப்பதில்லை. ஆனால், காபியில் இந்த வேதிப் பொருள் இல்லை என்பதால் தாராளமாக குடிக்கலாம்.

இதன் மூலம் மூளை நாளங்களில் படியக்கூடிய கொழுப்பு கரைக்கப்படுகிறது. அதே நேரம், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் அபாயம் காபி குடிப்பதால் உருவாகும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

@ அதற்காக காலை முதல் இரவு வரை அல்ல, இரண்டு அல்லது மூன்று கப் போதுமானது., மீறினால் அமிர்தமும்,...

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!