Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, September 30, 2011

விடுதலை சிறுத்தைகளுடன் தேர்தல் கூட்டணி SDPI

சென்னை : தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் SDPI வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், SDPI, விடுதலைச் சிறுத்தைகள், கிறிஸ்தவ அமைப்புகள் ஆகியவை இணைந்து கூட்டணியாகவும்; திமுக, அதிமுக, காங்கிரஸ் பாமக, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தனித்தனியாகவும் தேமுதிக மற்றும் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.

இநிலையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் SDPI வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னையில் உள்ள ரிப்பன் கட்டிடத்தில் SDPI-ன் சென்னை மேயர் வேட்பாளர் S.அமீர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மற்றும் முஸ்லீம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா, சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் தலைவர் மேலை நாசர் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் ஈரோடு மாநகராட்சியின் SDPI வேட்பாளர் யூனுஸ் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!