Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, September 20, 2011

தமிழக அரசி (யி) ன் கேலி கூத்து பாவப்பட்ட பள்ளி குழந்தைகள் !!

சென்னை, செப். 20 : அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் 35 நிமிடம் பாட நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பத்தால் பள்ளிகள் 15 நாட்கள் தாமதமாக திறக்கப்பட்டன.

பள்ளிகள் தாமதமாக ஜூன் 15-ந்தேதி தொடங்கின. சமச்சீர் கல்வியை அமல் படுத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டன.

இதையடுத்து ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து பள்ளிகளுக்கு சமச்சீர் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. காலாண்டு தேர்வு 22ந்தேதி தொடங்குகிறது.மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த போதிய காலம் இல்லாததால் பாட வேளை நேரத்தை 35 நிமிடம் அதிகரித்து நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகள், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்களை முடிக்கும் வகையில் பள்ளி பாடவேளை நேரம் 40 முதல் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும். இத்துடன் மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த வேண்டும். பாட வேளை நேரத்தை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!