Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 26, 2011

சவுதி பெண்களுக்கு ஓட்டுரிமை மன்னர் அறிவிப்பு!

ரியாத், செப்.26 : சவுதிஅரேபியாவில் முதன் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு பெண்கள் ஓட்டு போடக்கூடாது. மற்றும் ஓட்டு போடுவதற்கும் உரிமை இல்லை.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் வாழும் பெண்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள நகரசபை தேர்தலில் போட்டியிடவும், ஓட்டு போடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா (87) நேற்று அறிவித்தார். அப்போது அடுத்து நடைபெற உள்ள நகராட்சி கவுன்சிலர்கள் தேர்தலில் (ஷீரா) பெண்களையும் பங்குபெற செய்ய முடிவு செய்துள்ளோம் என அறிவித்தார்.

சவுதிஅரேபியாவில் வருகிற 29-ந்தேதி 285 நகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடக்கிறது. அதில் 5 ஆயிரம் ஆண்கள் போட்டியிடுகின்றனர். இதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர்தலில் பெண்களும் பங்கேற்க முடியும். தேர்தலில் அவர்களும் போட்டியிடலாம். ஓட்டு போடலாம். உரிமைகளுக்காக கடந்த சில மாதங்களாக முஸ்லிம் நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அந்த நிலை இங்கும் ஏற்படக்கூடாது என கருதி அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்து சவுதி அரேபிய மன்னர் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்ததாக தெரிகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!