Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, September 22, 2011

அரசியல்வாதியிடம் கேள்விகேட்கும் ரோஜா? அரசியல் பிரவேசமா!?

நகரி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடு தனக்கு ரூ.39 லட்சம் சொத்து மட்டுமே இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு நடிகை ரோஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐதராபாத்தில் ரோஜா கூறியதாவது : ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடாது. சந்திரபாபு நாயுடுவிடம் வேலை பார்க்கும் காவலாளிக்கு கூட அவரை விட அதிகமாக சொத்து இருக்கும். சந்திரபாபுநாயுடு பொது மக்களை ஏமாற்றுகிறார்.

9 ஆண்டு முதல்- மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு இவ்வளவுதான் சொத்தா? எங்களுக்கு அதை விட அதிகமாக இருக்கிறதே என்று அவரைப்பார்த்து பொதுமக்கள் சிரிக்கிறார்கள். அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் அவரை கிண்டலாக பார்க்கிறார்கள்.

சந்திரபாபுநாயுடு பினாமி பெயரில் பல இடங்களில் சொத்து வைத்துள்ளார். அவரது சொந்த தொகுதியான குப்பந்தில் 100 ஏக்கர் விவசாய பண்ணை வைத்துள்ளார். சென்னை, பெங்களூர், சிங்கப்பூரிலும் அவருக்கு சொத்து உள்ளது. அவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 10 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி சிவபார்வதி வழக்கு தொடர்ந்தார். அதற்கு சந்திரபாபுநாயுடு தடை வாங்கி விட்டார்.

தைரியம் இருந்தால் அவர் வழக்கை சந்திக்க வேண்டியதுதானே. சந்திரபாபுநாயுடு தனது சொத்துக்கள் ரூ.39 லட்சம் மட்டுமே என்பதை நிரூபிக்க அவராகவே சி.பி.ஐ. விசாரணை வைத்துக்கொள்வாரா?, இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!