Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 12, 2011

களவாணி படம்போல் மணமகளை கடத்திய மணமகன் !

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கழுக்காணி முட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் திவ்யா. (வயது 23). இவருக்கும் சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (30) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் வருகிற 30ந் தேதி நடைபெறுவதாக இருந்தது.

நிச்சயிக்கப்பட்ட ரவிச்சந்திரன் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பது பெண் வீட்டாருக்கு தெரிய வந்தது. எனவே பெண் வீட்டார் இந்த திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதற்கிடையே கடந்த 9ந் தேதி வீட்டில் இருந்த திவ்யா திடீர் என மாயமானார். அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த திவ்யாவின் தாயார் மணிமொழி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகள் திவ்யாவை ரவிச்சந்திரன், அவரது சகோதரர் ராமச்சந்திரன் ஆகியோர் காரில் கடத்தி சென்று உள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து திவ்யாவை மீட்டு தரவேண்டும் என்று கூறி உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திவ்யா காட்டுமன்னார் கோவிலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சிதம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது திவ்யாவுக்கும் அதே கல்லூரியில் படித்த ரவிச்சந்திரனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

தற்போது ரவிசந்திரனின் நடவடிக்கை சரி இல்லை என்று கூறி திவ்யாவின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தியதால் காதலர்கள் ஊரை விட்டு ஓடி உள்ளனர். மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

1 comments :

padam kathaiyaavathum...kathai padamaavathum thamilar vaalvil onriyavai... vaalththukkal

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!