Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, July 11, 2011

சங்கரராமன் கேசை நடத்தி சங்கராச்சாரியை உள்ளே தள்ள ஜெயா உத்தரவு

புதுச்சேரி, ஜூலை. 11 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ராமசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதில் ரவிசுப்பிரமணியம் அப்ரூவரானார். இந்த வழக்கில் அரசு சாட்சிகளாக 370 பேர் சேர்க்கப்பட்டனர்., கேசை நடத்தி சங்கராச்சாரியை உள்ளே தள்ள ஜெயா உத்தரவு பிரப்பித்திருபதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு பெண் விசயத்தில் ஜெயலலிதா உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் நினைவில் கொள்க.

இதில் 189 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களுடைய வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டது. அதில் 92 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் இறுதியாக வழக்கின் விசாரணை அதிகாரி சக்திவேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று அவரிடம் குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது சக்திவேல் கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இன்றுடன் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து இந்த வழக்கை நீதிபதி ராமசாமி வருகிற 18-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் அன்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேரும் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!