Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, July 15, 2011

அரசிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய வக்கீல்கள்

சென்னை : ஐகோர்ட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு அ.தி.மு.க., வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால், ஐகோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஐகோர்ட் வளாகத்தில், மாற்றுமுறை தீர்வு மையம் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா 16ம் தேதி நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., வழக்கறிஞர்கள் வி.பி.ஆர்.இளம்பரிதி, மாதவரம் செந்தில் உள்ளிட்ட பலர், ஐகோர்ட் வாயில் அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக, ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலிடம், தி.மு.க., வழக்கறிஞர்கள் இளம்பரிதி, எஸ்.ராஜகுமார், சி.ஜெயப்பிரகாஷ், சுகேந்திரன் ஆகியோர் தரப்பில் மனுவும் அளிக்கப்பட்டது. தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்து முடித்த உடன், அங்கு அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ராஜேந்திர நரசிம்மன், திவாகர் உள்ளிட்ட பலர் குவிந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு வழக்கறிஞராக பொறுப்பு வகிக்கும் சிலரும் கலந்து கொண்டனர். ஐகோர்ட் வளாகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல், ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.

# தன்னுடைய சொத்து குவிப்பு வழக்குக்காக கோர்ட் வாசல்படி மிதிக்காதவர் கல் நட்டு விழாவுக்கு வருகிறார் என்ன பொறம்போக்கு தனம். #

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!