Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, July 29, 2011

உலக அதிசயத்தில் மற்றுமோர் அதிசயம் !!

புதுடில்லி : ஆக்ராவில் அமைந்துள்ள காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகால், மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

தாஜ்மகாலைப் பார்க்க தினந்தோறும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், நுழைவுச் சீட்டு விற்பனை மூலம், தாஜ்மகால் கடந்த ஆண்டில், ரூ. 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டில் நுழைவுச் சீட்டு மூலம், ரூ. 14.36 கோடியும், 2009-10ம் ஆண்டில், ரூ. 17.24 கோடியும், 2010-11ம் ஆண்டில் ரூ.19.89 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும் 116 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த நினைவுச் சின்னங்கள் மூலம், இந்திய தொல்பொருள் துறைக்கு, கடந்த 2010-11ம் ஆண்டில் ரூ. 87 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில், டில்லியில் உள்ள குதூப் மினார் மூலம், ரூ. 10 கோடியும், ஹூமாயூன் கல்லறை மூலம் ரூ. 6.15 கோடியும், செங்கோட்டை மூலம் ரூ. 5.90 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

2 comments :

500 ரூபா கொடுக்கும் போதே நெனச்சேன்...

ஆஹா இவ்வளவு வருமானமா...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!