Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, July 6, 2011

ஒரு விசயத்திலாவது நாம் ஒன்று பாடுவோமே! ஈழத்திற்கு!!

சென்னை, ஜூலை.6: இலங்கைத் தமிழருக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் இயக்கம் நடத்த இந்திய கம்யூனிஸ்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலத் தலைநகர்களிலும் ஜூலை 8-ம் தேதி நடத்தப்பட உள்ள இயக்கத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜபட்ச போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எடுக்கவும், இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை ஆதரித்தும், இலங்கைத் தமிழருக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய அளவில் இயக்கம் நடத்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலத் தலைநகர்களிலும் ஜூலை 8-ம் தேதியன்று நடத்தப்பட உள்ள இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்வதாக நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

# ஈழத்திற்காக எதை செய்தோம் நாம், இந்த ஒன்றிலாவது ஒன்றுபட்டு நம் எதிர்ப்பை கான்பிப்போமே. நம் உறவுகளுக்கு ஒரு ஆறுதலுக்கு. #

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!